பக்கம்:வா இந்தப் பக்கம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழா வருகிறது... தேர் வருகிறது ...

கோயிற் சுவர்களில் வெள்ளை அடித்துப் பட்டை தீட்டப்பட்டு, விட்டது. காப்புக் கட்டியாகி விட்டது. சப்பரம் பழுது பார்க்கப்பட்டு விட்டது. திருவிழா நடக்கப்போகிறது... தேர் வரப் போகிறது...

ஆண்டு முழுவதும் ஆண்டவனை நோக்கி மக்கள் ஆலயத்திற்குச் சென்றது போக அந்த ஒருநாள் மட்டும் ஆண்டவன் தேரில் ஏறி மக்களிடம் வருவான்.

இந்தப் புத்தாண்டில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிற தேர்தல் திருவிழாவும் ஏறக்குறைய தேர்த்திருவிழா மாதிரிதான்.

மற்ற நாட்களில் ஒரு சட்டமன்ற உறுப்பினரையோ நாடாளுமன்ற உறுப்பினரையோ மக்கள் நடையாய்