இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86 விசிறி வாழை
இரண்டு உள்ளங்களும், உணர்ச்சி அலேகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. டியூஷன் முடிந்தது. பார்வதி தயங்கியபடியே சேதுபதியின் அறையை நோக்கி மெதுவாக நடந்தாள். அவள் இதயத்தில் பெரும் புயல் வீசிக்கொண் டிருந்தது. கால்கள் தடுமாறின. குழம்பிய உள்ளத்துடன் கனத்த இதயத்துடன் சேதுபதியின் அறைக் கதவுகளைத் தள்ளிக் கொண்டு வணக்கம்’ என்று கைகூப்பியபடியே உள்ளே பிரவேசித்தாள். அதே சமயத்தில், வாருங்கள்’’ என்று அழைத்த சேதுபதியின் குரலில் வழக்கமாகக் காணும் கம்பீரம் இல்லை; தடுமாற்றம் தொனித்தது.