பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

65


சூரியன், உலகத்தின் நடுநிலையாக உள்ளது. கோள்கள் சூரியனைச் சுற்றி ஓடிவரும் பாதைகள் வட்டவடிவமாகத்தான் இருக்க வேண்டும் என்றார்.

"இதுபோன்ற வடிவ அமைப்புதான் குறை பாடற்றது, முற்று முழு நிறைவானது" என்று அவர் கண்டு பிடித்த விஞ்ஞான விவரங்களை வைத்து வாதாடினார் பித்தாகரஸ்.

"நாம் வாழும் பூமியும், விண் மீன்களும், கோள்களும், உலகமும் ஆகியவை எல்லாமே உருண்டை வடிவமானவை.

“ஏனென்றால், கன உருவப் பொருள்களில் எல்லாம் கோள வடிவமே குறைபாடற்று முற்று முழு நிறைவுடையது, என்பதை அவர் அறிவியல் சான்றுகளோடும் தருக்க முறை வாதங்களோடும் விளக்கினார்.

இவற்றையெல்லாம் பித்தாகரஸ் கூறுவதைக் கேட்டு, கிரீஸ் மக்கள் பெருங்கோபம் அடைந்தார்கள்.

உலகத்தின் நடுநிலை பூமிதான் என்று கூறியவர்களையும், அதை நம்பி வாழும் மக்களையும், சமுதாயத்தையும், அரசையும் எதிர்த்து, பித்தாகரஸ் புதிய நம்பிக்கையை உருவாக்குகிறான்.

முன்னோர் வகுத்த விதிகளைப் பொன்னேபோல் போற்றுவதை விட்டு விட்டு, மனதுக்கு வந்தவாறு கன்னா பின்னா என்று கூறி மக்களிடம் மன மருட்சியை உருவாக்க - இவன் யார்?