பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

81


நாடோடியாய் அலைந்து நலிந்த பல்கலை நாயகன், இறுதியிலே அனாதையாகவே இறந்தார்.

வாழ்நாள் முழுவதும் அறிவைத் தேடித் தேடியே அலைந்து திரிந்த மேதை, அந்த அறிவால் அவனியை வாழவைக்க நினைத்த அறிவுப் புலவன், மனம் நொந்து மாண்டார்.

ஆனால், அவரது பல் துறை அறிவுப் புரட்சிகள், இன்றும் உலகிடையே நீறு பூத்த நெருப்பு போல மனப் புரட்சியைத் தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன.