பக்கம்:விடிவெள்ளி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 விடிவெள்ளி கிறார்கள். அது தவறு என்றே சொல்வேன். பார்க்கும் கண்களும், உணர்த்து மகிழும் உள்ளமும் பெற்ற ஒரு 总 3. 始 * 在警。 ; சிலருக்காவது அவை மகிழ்வைத் தருகின்றனவே? அந்த அளவுக்கு அவை பயனுள்ளவைதா னே?... ஞானியின் தொணதொணப்பைக் கேட்டுச் சகித்துக் கொள்ள வேண்டிய தலைவிதி தனக்கு வாய்த்ததே என்று வருந்தியவனாய் தலை அசைத்தான் அவன் தோழன். சுற்றிச் சுழன்ற யவன ஞானியின் விழி வண்டுகள் ஒரே இடத்தில் நிலைத்து நின்றுவிட்டதை அவன் துணைவன் கவனித்தான். அவன் பார்வையும். அதே o ங்கே இரண்டு யுவதிகள் எழிலுற அசைந்து வத்தார்கள். மாலைப் பொன் வெயிலில் குளித்தவாறு நடந்த அவர்கள் மிகுந்த வசீகரமாக ஒளிர்ந்தார்கள். ஆ வர்களைக் கண்ட யவனனின் முகம் மலர்ந்தது. கண்கள் லிரிந்தன இதழ்கள் சற்றே பிரிந்தன அவ்ர் களைப் பார்வையால் விழுங்குவது போல் நோக்கிய அவன், அஹ் என்ன அழகு! எவ்வளவு அற்புதம்' என்று క్లి தங்கள் களிப்பிலே ஆழ்ந்து உவகையோடு பேசி வந்த பெண்கள் இருவரும் அவனுடைய வெறித்த நோக்கைக் கவனிக்கவில்லை. அகம் நிறைந்த குதூகலத்தால் முகத்தில் மலர்ந்து குலுங்கிய மகிழ்ச்சி அவர்களின் அழகுக்கு அதிக அழகு சேர்த்தது. . அழகைக் காணும்போது அதைத் தொட வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது இயல்பு. அழகான மலரைப் பறிக்கவும்,அழகான குழந்தையை ஆசையோடு எடுக்கவும் தாமாகவே நீளும் கைகளை யாராவது தடுக்கிறார்களா என்ன?’ என்றான் அழகின் பக்தன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/61&oldid=906139" இலிருந்து மீள்விக்கப்பட்டது