பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
XIII


அவைகளை ஒரளவு முறையாகத் தொகுத்து இந்த நூலில் அளித்துள்ளதின் மூலம், அந்த வீர மன்னரது வரலாற்று வடிவத்தை விடுதலை இயக்கத் தொடக்கத்திற்கு அவரது பங்களிப்பை, தியாகத்தை சித்தரிக்க முயன்று இருக்கிறேன்.


இந்த நூல் முழுவதையும் ஆர்வத்துடன் படித்து முடிக்கும் வாசகர் இதயத்தில், இந்தச் சிறந்த தியாகிகளைப் பற்றிய அனுதாபத்தை எனது எழுத்துக்கள் ஏற்படுத்துமானால், எனது இந்த முயற்சி உரிய இலக்கினை எய்தியுள்ளதாக மகிழ்ச்சியுறுவேன். மேலும், நமது நாட்டு விடுதலை இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரை, முழுதுமாக மறந்துவிட்ட தமிழக மக்களுக்கு இனங்காட்டிய பெருமையையும், மன நிறைவையும் பெறுவேன்.


இந்தப் பணிக்கு முதலும் முடிவுமாக அமைந்துள்ள தமிழக அரசு ஆவணக் காப்பக வரலாற்று ஆவணங்களை, கடந்த மூன்று ஆண்டுகளில் படித்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்துக் கொள்ள மேலான அனுமதி வழங்கிய தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையாளர்கள் திரு. சு. ரங்கமணி, ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் உதவி ஆணையாளர் திரு வின்சென்ட், எம்.ஏ., திருமதி சரோஜா, எம்.ஏ., ஆகியோருக்கும், விரும்பிக் கோரிய கோப்புகள், தொகுப்புகள், பதிவேடுகள், நூல்கள் ஆகியவைகளைத் தேடி எடுத்து வழங்கி உதவிய, ஆவணக் காப்பகப் பணியாளர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனது இந்த எளிய முயற்சி, எழிலும், பொலிவும் பெற்று, அழகிய இந்த நூல் வடிவில் எழுத்துலகில் பவனி வருவதற்கு பேரார்வம் காட்டிய சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்கும் அதன் தலைவர் தோழர் எம்.வி. சுந்தரம் அவர்கட்கும் எனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமநாதபுரம்,

எஸ். எம். கமால்

ஆகஸ்ட், 1986.