பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

173


கும்பெனியாரது வருவாய் குறைந்து காணப்பட்டது. கணக்குகள் வளமையான வருமான வசூலைக் காண்பித்தன. ஆனால் வரவு இனத்தில் தொகை குறைந்தது. வசூலான தானியத்தை மிகவும் குறைவான விலைக்கு விற்று, வித்தியாசத் தொகையை தமது பேரத்திற்கு கிடைத்த தொகையாக துபாஷ் எடுத்துக் கொண்டார். அத்துடன் வேறு சலுகைகள் அளிப்பதாகச் சொல்லி இன்னும் சில வியாபாரிகளிடம் பணம் வசூலித்து வந்தார். மேலும், சிவகங்கை சேர்வைக்காரர்கள், எட்டையாபுரம் பாளையக்காரர் ஆகியோர் கி.பி. நவம்பர் 1797, மார்ச்சு ஜூலை 1798-ல் கும்பெனியாருக்கு செலுத்திய கிஸ்தித் தொகைகளும் அரசாங்க வரவுகளில் இடம் பெறவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இன்னும் இவை போன்ற பல கையாடல்கள், ஊழல்கள், இதற்கு சில சம்பிரதி, அமில்தாரும் உடந்தையாக இருந்தனர். இவை தவிர இவரும் இவரது உறவினர்களும் இராமநாதபுரம் சமஸ்தானக் கோயில்களுக்கு அடிக்கடி போய் வந்தனர். பக்தி மேலிட்டால் அல்ல. கோயில் செலவுகளிலும் கிடைத்ததைப் பெற்று வருவதற்காக.

இவரது ஊழல்களின் எதிரொலியாக கலெக்டர் ஜாக்ஸன் தமது பதவியை இழந்தார். சென்னை கவர்னர், இராமனாதபுரம் விசாரணைக்குழு' என்ற குழுவை நியமித்து இந்த ஊழலின் முழு விவரத்தையும் சேகரிக்க செய்தார். பெட்ரிக், ஒயிட், கோர்ல்பரோ, ஹாரிங்க்டன் என்ற பரங்கி அலுவலர்கள் அந்தக் குழுவில் இருந்தனர். 22,285, ஸ்டார் பக்கோடாக்கள் வரை அரசாங்கக் கணக்கில் கையாடல் செய்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. ரங்கப்பிள்ளை கையில் விலங்கிடப்பட்டு இராமனாதபுரம் வீதிகளில் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 14,851 ஸ்டார் பக்கோடா தொகையை கும்பெனியாருக்கு செலுத்தி ரங்கபிள்ளையை விடுவிக்குமாறு அவரது குடும்பத்தினர் கோரினர். அந்தக் கோரிக்கையை கும்பெனியார் ஏற்றுக் கொண்டனரா? எஞ்சிய தொகை வசூலிக்கப்பட்டதா? என்ற விவரங்கள் தெரியவில்லை.

ஆனால், சிவகங்கை மருது சேர்வைக்காரர், எட்டையாபுரம் பாளையக்காரர், கீழ்க்கரை அப்துல் காதிர் மரைக்காயர்,