பக்கம்:விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

எஸ். எம். கமால்


'......கடந்த 26-ம் தேதி காலையில் நெட்டுரிலிருந்து பரமக்குடி சென்று கொண்டிருந்தேன், சுற்றுப்புறத்தில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் பலமாகக் கேட்டது. நான் பரமக்குடி வந்து சேர்ந்த இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு எனது பணியாளர்கள் வந்து அந்த நிகழ்ச்சிப் பற்றிய விவரங்களை என்னிடம் சொன்னார்கள். ஆயுதம் தாங்கிய இராமநாதபுரம் வீரர் பலர் நெட்டுரையும், அங்கிருந்த சின்ன மருதுவின் ஆட்களையும் தாக்கினர். அவர்களும் திருப்பிச் சுட்டார்கள். தாக்குதல் பலத்ததால், சமாளிக்க முடியாமல் சிதறி ஓடினர். இராமநாதபுரம் ஆட்கள் ஊருக்குள் நுழைந்து, குடிசைகளைக் கொளுத்தினர். உச்சிப் பொழுதில் பெருங்கூக்குரலும் கள்ளர்களின் குழல் ஒலியும் கேட்டன. நான் பார்க்கும் பொழுது ஒருருாறு பேருக்கு குறையாத ஆட்களும், குதிரைகளில் அமர்ந்த ஐந்து தளபதிகளும், பரமக்குடி ஆற்றைக் கடந்து ஊருக்குள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை நான் வினவியபொழுது தாங்கள் சின்ன மருதுவின் நெட்டுர் கிராமத்தை தாக்கிவிட்டு வருவதாகப் பதில் அளித்தனர். அவர்களில் காயமடைந்த மூன்று வீரர்களும் இருந்தனர். அப்பொழுது பரமக்குடியில் நிலைகொண்டிருந்த ஆயிரத்து ஐநூறு வீரர்களின் அணியைச் சேர்ந்தவர்கள் அவர்கள்......'

அவரே மீண்டும் 22-6-1794 தேதியிட்ட கடிதத்தில் பரமக்குடியில் நடைபெற்ற பயங்கரமான படுகொலை பற்றிய விபரங்கள் இன்று காலையில் எனக்குக் கிடைத்தன. நேற்று அந்த வழியாக வந்த எனது வில்லைச் சேவகர்கள் அந்த நிகழ்ச்சி பற்றி கொடுத்துள்ள சத்திய பிரமான வாக்குமூலத்தில் தலையில்லாது கிடந்த 400 முண்டங்களை அவர்கள் பார்த்ததாகக் கூறியுள்ளனர். நெட்டுர் நிகழ்ச்கியின் தொடர்பாக வெள்ளை மருது நடத்திய தாக்குதலின் விளைவு இது. தனது இரண்டாவது மகன் கொல்லப்பட்டு மற்ற இரு மக்களும் படு காயம் உற்றதினால் சீற்றம் கொண்ட வெள்ளை மருதுவினுடைய செயல் என்பதைப் பலரும் சொல்லுகின்றனர். இது சம்பந்தமாக எனக்குத் தெரிந்த வேறு ஒன்றிரண்டு விபரங்களையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


'கடந்த 12ம் தேதிக் காலையில் இராமநாதபுரம் பேட்டை வழியாக சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது