இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
விடுதலை வீரர்கள் ஐவர்
விழிகளில் வீரம் சிரித்திடும் தமிழர்
விடுதலை கீதம் பாடிய கதையைக்
கவிகளின் மொழியில் கேட்டிட எழுவோம்
கண்களில் ஒத்திக் கால்மலர் தொழுவோம்
முதலில்......
முடக்கடா விடுதலை ஆர்வம் என்றார்
அடக்கடா சுதந்திர அனைலை என்றார்
அவரை எதிர்த்து
முழக்கடா முரசமென்று அதிர்ந்திட்ட கிங்கேறு
சழக்கரால் சாவில்வீழ்த்த சரித்திரம் கேட்டிடுவோம்
வானம் பொழியுது பூமி விளையுது
மன்னவன் காணிக்கை எதுக் கடா
ஆண்ட இனத்தால் மீண்டும் முற்றுகை
மாண்டிடும் புழுவே மகுடம் கழற்று
இப்படிக்
கனல் கொட்டும் பெருமூச்சு
கட்டபொம்மன் உயிர்மூச்சு - முழக்
கயிற்றினிலே ஆறியதால்
கயத்தாறுத் தலம் என்போம்
அத்தலத்து வரலாற்றை
அழகு திருச் சிற்றம்பலம்
தருகின்றார், அள்ளி உண்போம்.