இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12
விடுதலை வீரர்கள் ஐவர்
“குற்றமற் சொல்கின்றாய்? ஆமாம், செய்த
- குற்றங்கள் பலவுண்டு; வேற்றார் உம்மை
உற்றடுத்தக் கெடுக்கவந்த உலுத்தர் என்றே
- உணராத தொருகுற்றம்; எங்கள் நாட்டுள்
பற்றெடுத்த சுதநாகம் போலே, உம்மைப்
- புகவிட்ட தொருகுற்றம்; உங்கள் கையை
முற்றுவிட்டுத் தவிக்கின்ற பெரிய குற்றம்
- முன்னோரும் என்னேரும் செய்து குற்றம்!
“குற்றமென்று சொல்லிவிட்டாய்? எதுதான் குற்றம்?
- கும்பினியார் உமதாட்சி தன்னை, யானும்
தொற்றிவரும் நோயென்று தெளிந்து தேர்ந்து
- துடைத்தெறிய முனைத்தேனே, அதுவா குற்றம்?
குற்றேவேல் செய்தும்மை வாழ்த்தி, சுழைக்
- கும்பிடுகள் போட்டுவர வேற்கும் ஏனைச்
சிற்றரசர்' போலன்ரறி, மணம் பேணிச்
- சீறியமை எதிர்த்தேனே, அதுவா குற்றம்?
“குற்றந்தான் என்பாயேல், அதனை யானும்
- குலவையிட்டு வரவேற்பேன்! இந்நாள் என்னை
ஒற்றைமுழ சிறுகயிற்றில் தொங்க விட்டே
- உயிர்பறிப்பாய் என்குலும், இந்த மண்ணில்
பெற்றெடுக்கும் உடம்பெல்லாம் புகுவேன்! உம்மைப்
- பேர்த்தெறிந்து விடுதலையைப் பெறுநாள் மட்டும்
குற்றமிதை தான்புரியத் தயங்க மாட்டேன்!
- கெடிதுாக்கிப் போரிடுவேன்! திண்ணம்! திண்ணம்!”
கட்டபொம்மன் சூளுரையைக் கேட்டே, நெஞ்சக்
- கலக்கமுற்ற கும்பினியான் ‘இவனை இன்னும்
விட்டுவைத்தால் ஆபத்தே’ என்ப தோர்ந்து
- வீரனையே! தூக்கிட்டான்! எனினும் அந்த