பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கட்டபொம்மன்

13

மட்டில்லாப் புகழ்படைத்த வீரன் நந்தம்

வரலாற்றில் ஏற்றிவைக்கும் சுடரே, தம்மைச்

சுட்டெரித்துச் சுடுசாம்பல் ஆக்கும் என்னும்

சூட்சுமத்தை மட்டுமவன் உணர்ந்தா னில்லை!

ஏற்றிவைத்த அச்சுடரே பரத நாட்டின்

இதயங்கள் எல்லாம்புகுந்து, எழுச்சிக் காலக்

காற்றுவர நிமிர்ந்தெழுந்து, வடவைத் தீயாய்க்

கனன்றெழுந்து, புடைபுடைத்துக் கனன்று சீறி

வேற்றுவர் தம் ஆட்சியினை வெட்டி வீழ்த்தி

விடுதலையைத் தந்ததன்றோ? என்றே கூறி

எற்றிருந்த பணிமுடிப்பேன்! அவனை எண்ணி

இருகையும் கூப்புகின்றேன்! விடையும் கொண்டேன்