18
விடுதலை வீரர்கள் ஐவர்
காளையார் பாரென்று கண்டதுண்ட மாக்கிக்
காசால் அடித்தவனைக் கசையால் அடித்துஅவனைப்
பேசாச் சிற்பமாக்கிப் பேய்ச்சிரிப்பு சிரித்திருந்தரன்!
விரிந்த காட்டுக்குள் வேங்கையென வாழ்ந்தவன்
சரிந்தவரை எண்ணிச் சரித்திரம் அடுக்கியவன்,
கொடியவர் துரத்தும்பூங் கொடியவள் வேலுவைத்தன்
பிடிக்குள் அடக்கிப்டகைப் பிடிக்குள் படுத்தாமல்
குண்டுக்கு வடுகநாதன் குறியான போது
திண்டுக்கல் லுக்குத்தீரன் கொண்டு வந்தான்
அம்புபாய்ந்த நெஞ்சுக்குள் அன்புபாய பகைக்
கும்பலை ஒழித்தான் கொடிமுல்லை சிரித்தாள்!
அதனால்......
சீமையில் பொருள்பெறாத சீமையர்கள் மீண்டுமந்த
ஊமையின் தோழர்க்கே சீமையினைத் தந்துப்
பின்போனார்! வெள்ளைமருதோ பேருவகை உந்தப்
பின்போனான்! மண்கொள்ளப் பின்போனான் அவன்பின்
சின்னமருது வீரத்தின் சின்னம் மருதென்பான்[னே
இன்னல் களைதற்கு இணைக்கரம் போலெழுந்தான்!
அவனோ ......
அறத்தின்பால் வைத்திருந்த அன்பால், பொருட்பால்
சிறப்பால்... குன்றின்பால் சேர்ந்த முருகன்பால்
காமத்துப் பால்கொண்ட காரணத்தின் பால்முப்பால்
பாமணக்கும் தமிழின்பால் பாசமுற்ற தின்பால்
குன்றைக் குடித்தவனைக் கோயிலில் குடியேற்றக்
குன்றக் குடியினில் கோயிலைக்கட் டுவித்தான்
தேனாட்சித் தமிழும் மீன்ஆட்சி அரசும்
கோனாட்சி செய்திருந்த மீனாட்சி ஆலயத்தில்
இராத் திரிக்கு விளக்கேற்றி இருஆட்கித் தீபத்தின்