இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
விடுதலை வீரர்கள் ஐவர்
- பந்துபோல் உடலும் பகைவரை யெரிக்கச்
- செந்தழற் கண்களுந் தேவை யென்றார்
- கொன்றை யடித்த வெள்ளையன் சொற்களைக்
- கேட்டடி பணிந்து கிடந்த மனிதரைப்
- பாட்டடி கொடுத்துப் பதைக்கவைத் தாரே!
- இந்தியா என்றொரு பத்திரி கைபொறுப்
- பேற்று நடத்திவந்தார் -- அதில்
- சொந்த மாய்ப்பற்பல கவிதைகள் கட்டுரை
- சூடாய் எழுதி வந்தார்.
- இந்தியா என்றொரு பத்திரி கைபொறுப்
- கண்டனப் பாடலுங் கருத்துப் பட்டங்களுங்
- காட்டிப் புரட்சி செய்தார் - அதைக்
- கண்டனர் வெள்ளையர் மண்டையிடி குளிர்
- காய்ச்சலுங் கொண்டு விட்டார்.
- கண்டனப் பாடலுங் கருத்துப் பட்டங்களுங்
- சூரத் எனுமூரில் வீரர் பலர்கூடிக்
- சூழ்ந்தவோர் காங்கிரசில் - அவர்
- வீரத் திலகரை நேரினிற் சந்தித்து
- வீழ்ந்தவர் தாள் பணிந்தார்.
- சூரத் எனுமூரில் வீரர் பலர்கூடிக்
- தீப்பொறி கக்குங் கருத்துக்களால் நாட்டுச்
- சிங்க இளைஞர்களைத் தட்டிக்
- கூப்பிட் டெழுப்பினார் வீரர்கள் யாவரும்
- கொந்தளிப் போடெழுந்தார்.
- தீப்பொறி கக்குங் கருத்துக்களால் நாட்டுச்