இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
- நீர் வீழ்ச்சி போலன்றே நிமிர்ந்த கவி பாரதிக்கு
- பாலோச்சிப் பொழிந்து விட்டார். நன்று நன்று.
- நீர் வீழ்ச்சிச் சேட்டையினால்
- பேரதிர்ச்சிப் பெரும்புயலைத் தமிழ் நாடுதாங்கிற்றந்தோ.
- வ.வே.சு. அய்யரெனும் வாய்மைகொள் செயல்மறவர்
- ஆவேச நீர்வீழ்ச்சிச் சுழலில் சிக்கி
- அன்றொரு நாள் மாய்ந்து விட்டார்
- சுவர் எழுப்பிச் சுதந்திரத்தை அடைத்துப் போட்டுச்
- சுற்றி நின்று பாதுகாத்த அன்னியரின் படைகெடுக்க
- இவர் எழுந்தார் இடையில் மறைந்தார்
- இதோ மீண்டும் வருகின்றார்.
- அழகொழுகும் அப்துல் ரகுமானின்
- அருமை மிகு செந்தமிழால் உயிர்பெற்று.