பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைவர் உரை
நீர் வீழ்ச்சி போலன்றே நிமிர்ந்த கவி பாரதிக்கு
பாலோச்சிப் பொழிந்து விட்டார். நன்று நன்று.
ஒரு
நீர் வீழ்ச்சிச் சேட்டையினால்
பேரதிர்ச்சிப் பெரும்புயலைத் தமிழ் நாடுதாங்கிற்றந்தோ.
வ.வே.சு. அய்யரெனும் வாய்மைகொள் செயல்மறவர்
ஆவேச நீர்வீழ்ச்சிச் சுழலில் சிக்கி
அன்றொரு நாள் மாய்ந்து விட்டார்
சுவர் எழுப்பிச் சுதந்திரத்தை அடைத்துப் போட்டுச்
சுற்றி நின்று பாதுகாத்த அன்னியரின் படைகெடுக்க
இவர் எழுந்தார் இடையில் மறைந்தார்
இதோ மீண்டும் வருகின்றார்.
அழகொழுகும் அப்துல் ரகுமானின்
அருமை மிகு செந்தமிழால் உயிர்பெற்று.