பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. வே. சு. ஐயர்

43

காஞ்சிரங்காய் ஆட்சிக்குக் கல்லறையைக்
கட்டிவந்த வீரர் தம்மைப்
பூஞ்சைகளாய் மதித்துவந்த ‘ஆஷ் துரையைப்
பொசுக்கிநின்ற வீரன், நாட்டு
வாஞ்சையுள்ள வாஞ்சி ஐயன் ஐயரது
பாசறையில் வளர்ந்த சிங்கம்!
நாஞ்சிலுக்கு முனைபோல் காட்டிளைஞர்
தமைஐயர் நடத்தி வந்தார்

உற்றாரோ டொருவீட்டில் உரையாடிக்
கொண்டிருந்தார் ஓர் நாள் ஐயர்;
பற்றுகின்ற நினைப்போடு பதுங்கி யிருந்
தார் ஒற்றர் வெளியே! அத்த
முற்றுகையின் நேரத்தில் மூண்டதொரு
அழுமோசை வீட்டுக் குள்ளே
ஒற்றர்கள் ஒதுங்கி நிற்க ஒருபாடை
நகர்ந்த தங்கே ஊருக் குள்ளே!

வீடுவிட்டுப் புறப்பட்டோர் காடுவரை
செல்லவில்லை; வெறுமை யாகக்
கூடுவிட்டுப் போனவுயிர் வந்தது போல்
பிணமெழுந்து குதித்த(து) ஆமாம்
நாடு விட்டுக் கொடுக்காத நம்நாட்டு
வீரர்தம் சரித்தி ரத்தின்
ஏடுவிட்டுப் போகாத ஐயர் தம் சாகசத்தில்
இதுவும் ஒன்று!
பிணியாக இந்நாட்டைப் பிடித்த
அந்நியரின் பிடியை நீக்கத்
துணியாத செயலில்லை; துரத்தி வந்தோர்
கண்களிலே துணியைக் கட்ட