பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

விடுதலை வீரர்கள் ஐவர்

அணியாத கோலமில்லை; ஆற்றாத
தொண்டில்லை; அதிகாரத்தால்
தணியாத நெருப்பாம் அத் தணல் மனிதர்
தண்ணீரில் சமாதி கண்டார்!

“நீர்வீழ்ச்சி தனிலன்று நீர்வீழ்ச்சி
உற்றாலும் நின்ற கீர்த்தி
சீர்வீழ்ச்சி உற்றதில்லை பேர்வீழ்ச்சி
உற்றதில்லை சிதைந்தே இந்தப்
பார் வீழ்ச்சி உற்றாலும் பாரதத்து
மக்கள் தம் மனத்தி ருந்து
நீர்வீழ்ச்சி உறுவதில்லை” எனப்புகழ்
வரலாற்றில் நிலைத்து நின்றார்.