பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

49

கல்விகற்றார், படிப்படியாய் உயர லானார்;
கடைசியிலே வழக்கறிஞர் ஆனார்; பொய்யைச்
சொல்வ தென்றால் தித்திப்புக் கனிகள் என்று
சொல்லுகின்ற வழக்கறிஞ ரிடையே, மெய்யைச்
சொல்லிவந்தார் சிதம்பரனார்; அதனால் மக்கள்
செல்வாக்கை அவர் பெற்றார்; சிறப்பைப் பெற்றார்.

நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக் காட்டாய்
நிலமக்கள் நடுவினிலே விளங்கி வந்த
சோதிநிலா வான சிதம்பரனார், கெட்ட
சூழ்ச்சிக்கும் வஞ்சனைக்கும் விரோதி யானார்;
ஏதம்புரி கின்றவரை எதிர்ப்பார்; எந்த
இச்சைக்கும் அர்பணியார்; காசு வைத்த
சூதாட்ட வாழ்வவர்க்குப் பிடிக்க வில்லை;
தொல்லறத்தை, நல்லறத்தை நடத்தி வைத்தார்!

கடலாடும் தூத்துக்குடி நகரில் மாற்றார்
கவலையின்றி வாழ்வதையும் ஆள்வதையும்
உடலாட நம்மக்கள் சோர்வ டைந்தே
உணவின்றி வீழ்வதையும் மாள்வ தையும்
மடமையினால் மக்களெல்லாம் அடிமைப்பட்டு
மதிப்பின்றி, மேன்மையின்றி இருந்ததையும்
கடமையினால் சிதம்பரனார் தினமும் கண்டார்;
கனலானூர், மனங்கொதித்தார்; கொந்தளித்தார்!

ஏற்றத்தை அயல் நாட்டார் பெற்றிருக்க,
இந்நாடார் புழுதிதனில் படிந்திருக்க
மாற்றத்தை உருவாக்கத் திட்டமிட்டார்;
மளமளென வாணிகத்தில் எண்ணம் வைத்தார்;

வி.-4