பக்கம்:விடுதலை வீரர்கள் ஐவர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ. உ. சிதம்பரனார்

59

எதிர்ப்பட்ட அயலாரைப் பகைக்க லானூர்!
துப்பாக்கி யால்சுட்டுப் பலரை இங்குச்
சுடுகாட்டுப் பொடியாக்கி வாழ்ந்திருந்த
அப்பனவன் ஆஷ்துரையை, வாஞ்சி அய்யர்
அடிப்பதற்குக் காலத்தைப் பார்த்திருந்தார்!
வெப்பத்தைத் தணிப்பதற்கு, கோடைக்கானல்
விரும்பலுற்ற ஆஷ்துரையோ ரயிலில் சென்றான்!
தப்பிக்க ஏதுவழி? வாஞ்சி அய்யர்
தருணத்தைப் பயன்படுத்திச் சுட்டுக் கொன்றார்!

துரைமான, தன்னையேதான் சுட்டுக் கொண்டு
துடிதுடிக்க வாஞ்சியாரும் செத்துப் போனார்!
தரை மாந்தர் எழுச்சியையும் அவர்கள் மாற்றார்
தமைநொறுக்க, தவிடாக்க நினைத்த தையும்
ஒருமுறைதாம் நினைத்திங்குப் பார்க்க, அந்த
உணர்ச்சியுள்ள சிதம்பரனார் தெரிவார்; அன்பு
முறைவழியே அவர்நோக்கம் என்றிட்டாலும்
மூண்டெழுந்த தீயையவர் என்ன செய்வார்?

தமிழ்நாடு தந்திட்ட விடுதலைப் போர்
தங்கங்கள் பலவற்றுள், சிதம்பரம் தான்
கமழ்கின்ற மல்லிகைப்பூ!, அவர்க்கு ஈடாய்
காட்டுதற்கு இனுமொருவர் பிறக்க வில்லை!
உமிழ்கின்ற நஞ்சினிலும் அன்பைக் கண்டார்!
உயர்பண்பு ஒன்றினையே மனத்தில் கொண்டார்
தமிழ்க்கவிஞர் பாரதியும் சிவாவும் வீரத்
தலைமுறையைத் தோற்றுவிக்க நினைத்த நாளில்

சிதம்பரனார் முன்னின்றார், புதிய தான
செயல் செய்தார், எதிர்நீச்சல் கற்றி ருந்தார்!
நிதமந்த சிதம்பரனார் வீரத்தையும்