பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

孟& விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கை ஒவ்வொன்றும் அதுவே. தொட்டுத்தொட்டுப் பார்த்துக் குற்றமில்லாதது போல் பாவனை காட்டிக் கெட்டியாக இ று க் கி க் .ெ கா ஸ் ளு ம் . எத்தகைய சர்வாதிகாரி நான். எனக்கே நாளைக்கு நான் வாழ் வேனா என்ற உறுதி கிடையாது. என் அறையில் ஒற்றர்களின் தலைவன் தோன்றி என்னோடு நட' என்றால், பேசாது, அவனைப் பின் தொடர வேண்டி யதுதான். எங்கு, ஏன் என்பதே எனக்குப் புரியாது. சர்வாதிகாரி என்பது- கயிற்றிலே தொங்குவதைப் போன்றதுதான் கயிறு கழுத்தை இறுக்காதவரை யில் நன்மை. நஞ்சை ஆய்கின்ற அறிஞனைப் போன்றது என் வாழ்க்கை. விழிப்பில்லையென்றால் ஆயும் அறிஞனையே நஞ்சு கொன்றுவிடுமல்லவா இப்பொழுதாவது தெரிகிறதா நான் ஏன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறேனென்று. திஸ்ப் : ஆ - கடவுளே-மிகப்பயங்கரமான பதவிதான் உங்களுடைய பதவி! ஆன்ழெல் : ஆம்- குடிகள் மற்ற தன் போன்ற குடி களைக் கொடுமைப் படுத்துவதற்குரிய கருவி நான். அந்தக் கருவி மிகப் பயன்பட்டுப் பயன்பட்டு விரை விலே தானே தேய்ந்து உடைந்து விடும், தீஸ்ப் நான் கொடியவன்-கொடுத்து வைக்காதவன். எனக்கு இந்த உலகத்தில் இன்பமான ஒன்று இருக்கிற தென்றால் அது நீதான். ஆனால் நீ என்னைக் காதலிக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டு தான் இருக்கிறேன். போகட்டும். வேறு யாரையா கிலும் காதலிக்காமலாவது இருக்கிறாயா? இஸ்ப் : இல்லை-வேறு யாரையும் இல்லை. வீணாக ஏன் மனதைக் குழப்பிக் கொள்கிறீர்கள். ஆன்ழெல் : ஊம்...ஏதோ இல்லை, இல்லை என்கிறாய்...