கவிஞர் வாணிதாசன் - - என்ன பேசிக்கொண்டிருந்தீர்கள். இன்பமாகஇனிமையாக-ஆசை மீற பேசி இருப்பீர்கள். நான் உன்னைக் காதவிக்கிறேன். என் உள்ளக் கடவுள் நீ! தான் உனக்கு. நீ எனக்கு வாழ்வு நீ-வளம் நீ. வற்றாப்பொய்கை நீ-வான்மதி நீ-கடலலை நான்தென்றற்காற்று நீ-செவ்விதழ் நான்-இப்படிப் பலப் பல பேசி இருப்பீர்கள். இல்லையா-என்னைத் தொடாதீர்கள். கத்தேரினா : எனக்கொன்றும் விளங்கவில்லையே. திஸ்ப் : அம்மா-ராணியம்மா. உடலை விற்கும் எங்கள் இனத்தைவிட கீழ்த் தரமாகவல்லவா, நீங்கள் இருக்கிறீர்கள். காசுக்காக நாங்கள் எங்கும் எவர் முன்பும் பகலில் ஒரு மனிதனிடம் உரத்துச் சொல்லு கின்ற சொற்கள். நீங்கள் இரவிலே வெட்கமின்றி ஆசை நாயகனோடு முணுமுணுக்கிறீர்கள். என்ன வேற்றுமை நமக்குள் இருக்கிறது, நாங்கள் பகலில்நீங்கள் இரவில். காலம்தான் வேற்றுமை. செய்கை யல்ல உங்கள் மணவாளர்களை வெளிப்படையாக நாங்கள் காசுக்காக கவர்கிறோம். நீங்கள் காதலுக் காக-களியாட்டத்திற்காக எங்கள் காதலரை மறை வாகத் திருடுகிறீர்கள். தன்னலம், ஏமாற்றம், ஒழுங்கின்மை, ஒழுக்கக்கேடு, சீ. நீங்கள் ஒரு பெண் பிறப்பா. நாங்கள் யாரையும் ஏமாற்ற மாட்டோமே. நீங்கள், தாயை, தந்தையை, கட்டிய கணவனைஉலகத்தை, கூடுமானால் கடவுளைக்கூட ஏமாற்று கிறீர்களே. பெரிய இடமாம். அரச குடும்பமாம். வெளியிலே பார்! அரசகுடும்பத்துப் பெரிய இடத்துப் பெண்கள். தங்களை மறைத்துக்கொண்டு கோவிலுக் குப் போகிறார்கள். ஒதுங்குங்கள்-வழிவிடுங்கள். எவ்வளவு மரியாதை-அவர்கள் தங்களை மூடிக் கொண்டிருக்கும் போர்வைத் துணியை விலக்கிப் பார்த்தாலல்லவா தெரியும்-போர்வைக்கிடையிலே