பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர்வாணிதாசன் 75 பார்க்கவே எனக்கு நேரமில்லை. அவ்வளவு அரசியல் வேலை இருந்தது. என் பெரியப்பாவின் வலிகட்டாயம். இந்த மூதேவியை மணந்துகொள்ள வேண்டியவனானேன். அவள் முகத்தைப்பார்த்திருக் கிறாயா? எப்பொழுதும் ஏதோ பறிகொடுத்தவள் போலவே இருப்பாள். மலடி - இதுவரையில் ஏதாவது பிள்ளைதான் உண்டா? எங்கள் வெறுப்பி லிருந்து எவரும் தப்பித்தது கிடையாது. எங்கள் இரத்தத்திலே ஊறிவிட்டது அது. என் பாட்டனார் கோமான் அஜோவை வெறுத்தார். கோமான் அஜோ வேனிஸ் கிணற்றிற்கு உணவாக்கப்பட்டார். என் தந்தை பதோயரை வெறுத்தார். வேனிஸ் ராணி இல் விருந்திலேயே விஷமிட்டுக்கொல்லப் பட்டார் பதோயர். நான் இவளை வெறுக்கிறேன். இவள் இனி பிழைக்க முடியாது. என் தாயின் எலும்புகள் இவளுக்காகப் பரிந்து வந்து மன்றாடி மன்னிப்புக் கோரினாலுங்கூட என் தாயின் வேண்டு கோள் மறுக்கப்படும். இவள் சாவாள். அது உறுதி. திஸ்ப் வேனிஸ் அரசாங்கம் உங்களை இதற்கெல்லாம் அனுமதிக்கிறதா? * o ஆன்ழெல் மன்னிப்பதல்ல. தண்டிப்பதுதான் அதன் குறிக்கோள். -- திஸ்ப் : ஆனால் பிரகதானி குடும்பம் - உம் மனைவியின் குடும்பம்? ... " • ஆன்ழெல் : என்னை வாழ்த்தும். திஸ்ப் ஊம். முடிவு கட்டிவிட்டீர்கள். அவள் சாவப் போகிறாள். சரி. இன்னும் யார் எவர் இறக்கப் போகிறார் என்று தெரியாதிருப்பதாலும் யாவும் மறைவாகவே இருப்பதாலும் எதற்காக அறையை இரத்தமயமாக்கப்போகிறீர்கள் எப்படியாவது இது