பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ மக்களுக்குத் தெரிந்துதானே போகும். வேறு வகை யில் இதைச் செய்தால் என்ன? கொலைகாரன் என்றைக்காவது ஒரு நாள் சர்வாதிகாரியின் மனைவி ஏதோ கள்ளக் காதல் புரிந்தாளாம்-அதற்காக அவளைக் கொல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. நான் கொன்றேன் என்று சொல்லக் கூடுமல்லவா? ஏன் அந்த வீண்தொல்லை. - காதும் காதும் வைத்த மாதிரி வேறு வகையில் நடத்தி விட்டால்... ஆன்ழெல் : ஆம் நல்லயோசனைதான். - நஞ்சு - மிக நல்லதுதான். அது என்னிடம் இல்லையே. திஸ்ப் : என்னிடம் இருக்கிறது. ஆன்ழெல் : எங்கே?. திஸ்ப் : என் வீட்டில். ஆன்ழெல் : என்ன நஞ்சு? :திஸ்ப் : கொடிய நீஞ்சு - நான் தான் உங்களிடத்தில் முன்பு கூறினேனே? என் நண்பர் எனக்காகப் பரிசு வழங்கிப் பெட்டியில் அனுப்பி வைத்தது வீட்டில் இருக்கிறது-ஒரே ஒரு வினாடி-திர்ந்துவிடும். ஆன்ழெல் : ஆம் அதுதான் சரி - நல்லயோசனை-அது . நம்மோடே மறைந்து விடும்; வீண் பேச்சுக்கு இடம் இருக்காது. இதோ.பார் தீஸ்ப். உன்னைத் தவிர மற்றவர்களின் மேல் எனக்கு நம்பிக்கையில்லை. என் பெயர், புகழ் - நிலை - மானம் - காப்பாற்றப்பட வேண்டுமானால் நீ சொன்னதுதான் நல்ல யோசனை. . எப்படி இவள் இறந்தாள் என்பதே யாருக்கும் தெரியாத புதிராக இருக்கும். இந்தச் சாச்சடங்கு யாருக்கு என்பதே இன்னும் மக்களுக்குத் தெரியாது. கோட்டையிலே யாரும் அறியாமல் அடக்கம் செய்து விடலாம். வெளிக்கு ஒன்றும் தெரியாது. ஆம்