பக்கம்:விட்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ-மொழிபெயர்ப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - விக்டர் வியுகோவின் ஆன்ழெல்லோ கத்தேரினா கடிதம் வந்துசேர்ந்தது. இதோ அந்தக் கடிதம். - - - (கடிதத்தைக் காட்டுகிறாள்) ரொதோல் கிடைத்ததா. சரி-மகிழ்ச்சி. கடிதம் - எழுதினால் போய்ச் சேர்ந்ததோ இல்லையோ என்ற கவலைதான் இருக்கும். கத்தேரினா : எல்லா வழியிலும் காவல்தானா யாரும் இரவுக்கு முன் போகமுடியாதா. ரொதோல் : ஒருவர்கூட போக முடியாது. நான்தான் உனக்கு முன்பே சொன்னேனே. சர்வாதிகாரியின் கட்டளை இது. கத்தேரினா : சரி அப்படியானால் நீ போகலாம். நீதான் என்னைப் பார்த்துவிட்டாய். பேசிவிட்டாய். இப்பொழுது உனக்கு அமைதிதானே-நீ போஊரெல்லாம். ஏதேதோ பேசுகிறது என்கிறாய். இங்கும் ஒரே அமைதியாக இருக்கிறது. .ெ ராதோல்போ போய்விடு. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நீ போய்விடு. விரைவாகப் போய்விடு. சர்வாதிகாரி வரக்கூடும். போ என் கண்ணல்ல- போ. நீ இலறு மாலைவரை கோட்டைக்கு உள்ளே இருக்கவேண்டி இருப்பதால் இந்தா நானே உன் போர்வையை மூடுகிறேன். இங்குள்ள ஒற்றர்கள் முன் உன் பயத்தைக் காட்டி விடாதே. இயற்கையாக இரு. ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டு அங்குமிங்கும் போகாதே. அது உன்னைக் காட்டிக் கொடுத்துவிடும், தெரிகிறதா-யாராவது உன்னை எழுதச்செர்ன்னால், ஏதாவது சொல்லிப் போய்விடு. எழுதாதே, ரொதோல் : எதற்காக இவ்வளவு அறிவுரைகள் கத்தேரினா? - -