பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 விந்தன் அந்த நாவல் வெளியான காலம் 'சாகித்ய அகாதெமி' என்ற ஓர் அமைப்பு தோன்றாத காலம் தோன்றி இருந்தால் 'பாலும் பாவையும் அந்த நாளிலேயே அது அளிக்கும் பரிசைப் பெறும் தகுதியை முதன் முதலில் பெற்றிருக்கலாம் 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று சொல்லப்படுவது உண்மையானால் அதன் தீர்ப்பு மட்டும் வேறு விதமாக இருந்திருக்கப் போகிறது? அது மட்டுமல்ல, 'திறமையான புலமை எனில், அதை வெளி நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும்' என்று சொல்லி விட்டுப்போனான் பாரதி அந்தப் புலமையை என் கதைகளிலும் கண்டதால்தானோ என்னவோ அவற்றில் பல இந்திய திராவிட மொழிகளில் மட்டுமல்ல, உலகமெங்கும் உள்ள பல முற்போக்கு நாடுகளில் பல அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன இந்த நிலையில் 'பாலும் பாவையும் என்ற நாவலைத் தொடர்ந்து பல நாவல்கள் சிறுகதைகள் பல கட்டுரைகள் திரட்டுகள் வெளி வந்திருக்க வேண்டும். வரவில்லை ஏன்? காரணம் வேறு யாருமல்ல நானே! 'ஏதோ ஏதோ ஒரு மயக்கம்' என்கிறார்களே சினிமாவில் வரும் காதலர்கள், அப்படி ஒரு மயக்கம் அடியேனையும் அந்நாளில் ஆட்கொண்டது. அதன் காரணமாகவே பல வகைகளில் எனக்குக் கற்பகத்தருவாக இருந்து வந்த கல்கி அலுவலகத்தை விட்டு கல்கி அவர்கள் எச்சரித்தும் கேளாமல் விலகினேன் நடக்கக்கூடாத இது நடந்தது 1951 - ஆம் ஆண்டில். அப்போது சுந்த சுயமரியாதை வீரனாக இருந்து வந்த நான் இப்போது சில இடங்களில் சில விஷயங்களில் 'அட்ஜஸ்ட் செய்து கொண்டு போவது போல் போயிருந்தால் நானும் மற்றவர்களைப் போல் சினிமா உலகிலும் பிரகாசித்து இருக்கலாம் அந்த புத்தி அப்போது இல்லாததால் அதிலிருந்தும் விலகி சுதந்தர எழுத்தாளனாக இருந்து சுடர்விட முயன்றேன். நான் விட முயன்றாலும் என்னைவிட விரும்பாத சுயமரியாதையோ அற்கும் குறுக்கே நின்று தொலைத்தது. 'இதெல்லாம் எதற்கு, சொந்தமாகவே ஒரு பத்திரிகையே நடத்தி பார்த்து விடுவோமே?' என்று 1954ஆம் ஆண்டில் 'மனிதனை ஆரம்பித்தேன் மக்கள் ஆதரவு அதற்கு அமோகமாக இருந்தாலும் விற்பனையாளர்கள் செய்த சத்திய சோதனையாலும் அந்த சத்திய சோதனையிலிருந்து அவ்வப்போது மீள்வதற்கு வேண்டிய பொருளாதார வசதியோ மீட்பதற்கு வேண்டிய நண்பர்களோ