பக்கம்:விந்தன், மு. பரமசிவம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 சிறு கதைகள் தமிழில் விந்தன் எழுதிய காலம் படித்த மேல்தட்டு வர்க்கத்தினருக்கே எழுத்தும் பத்திரிகையும் ஏகபோக உரிமை என்று எண்ணிய காலம் இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சி புரிந்த மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் பாட்டாளி வர்க்கத்தில் இருந்து படைப்பாளிகள் தோன்றியதாக வரலாறு இல்லை. ஆனால் தமிழகத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்தது நிகழ்த்தியவர் விந்தன், அவர் ஒரு அச்சுத் தொழிலாளி விந்தன் கதைகளைப் பற்றி பேராசிரியர் கல்கி கூறுகிறார் ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் சிறிய கதைகளும் பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு சாதியாரைப் பற்றியே வந்து கொண்டிருந்தன எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் பெரும்பாலும் பிராமணர்களாவே யிருந்தபடியால் அந்தச் சாதியினரைப் பற்றியே கதைகள் எழுதப்பட்டன அந்தக் கதைகளில் கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணக் குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது பிராமண எழுத்தாளர் கஷ்டப்பட்டு வேறு சாதியினரைப் பற்றிக் கதை எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை, உடை பாவனைகள் அவ்வளவு சரியாக இருப்பதில்லை இந்தச் சமயத்தில் நவயுக புதுமலர்ச்சி எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும் மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள். அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை எளியவர்களையும் உழைப்பாளி மக்களையும் பற்றிய கதைகள் எழுதத் தொடங்கினார்கள். விந்தன், உழைப்பாளி மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப் பண்பட்டவர் ஏழை எளியவர்கள் தொழிலாளிகள் பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி அனுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர் அந்த உணர்ச்சிகளை இலக்கியப் பண்பு வாய்ந்த சிறுகதைகள் பலவற்றை அவர் திறம்பட எழுதியிருக்கிறார் அவருடைய கதாபாத்திரங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் நாம்தான் காரணமோ என்று எண்ணி எண்ணி துக்கம் இல்லாமல் தவிக்க நேரும் ' ('முல்லைக் கொடியாள் முன்னுரையில் கல்கி)