பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 விந்தனின் பாலும் பாவையும் - பூவை எஸ். ஆறுமுகம் மதிப்புக்கு உகந்த விந்தன் அவர்களுக்கு, இதயம் தோய்ந்த அஞ்சலிகள். உங்களுடைய முதல் நவீனம் பாலும் பாவையும்! அதைப் படித்து முடித்து, சகோதரி சரளா உங்கள் முன்னே முகம் காட்டத் துணிவு கொள்ளாவிட்டாலும், அகம் காட்டி, அதில் புறத்தையும் காட்டி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்திருக்கிறாள். அந்தச் சகோதரியின் துணிச்சலை எந்த அப்பாவியும் பாராட்டாமல் இருக்க மாட்டான். சரளாவின் திருமுகம் கிடைக்கப் பெற்ற நீங்கள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறீர்கள். மரபை ஒட்டிய பண்பாடு! நன்றியும் கூறியிருக்கிறீர்கள்: உங்களுடைய நாவலை மனத்திண்மை மாறாமல், பெண் ஒருத்தி படிப்பதென்பதோ, படித்த பிறகு உங்களுக்குத் தன் கருத்தை வெளியிடுவதென்பதோ லேசுப்பட்டகாரியமா, என்ன? ஒருமுறை என்ன, ஓராயிரம் தடவை வேண்டுமானாலும் நீங்கள் நன்றி சொல்லலாமே?. தமிழ்ச் சமுதாயத்திலே மாதவன் போற்றிடும் பெண்குலத்தை மாசுப்படுத்துவதற்காகத் தாங்கள் இப்புதினத்தைத் தயாரித்திருக்கிறீர்கள்! சரளாவின் கட்சி இது. கட்சி என்று எழுதுவதைவிட, குற்றச்சாட்டு என்றே எழுதிவிடுவதுதான் பொருத்தம்.