பக்கம்:விந்தன் இலக்கியத் தடம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 விந்தன இலக்கியத் தடம் அவள், தசரதகுமாரனாலும் கைவிடப்பட்டு நடுத்தெருவிலே நிற்கும் லையில், அடக்கடவுளே! பாலும் பாவையும் ஒன்றென்று எண்ணியா வு இ2! ஒனமறனறு நீ என்னைப் படைத்தாய்? என்று நெட்டுயிர்க்கின்றாள். அடுத்த கனம், யார் இடம் அளிக்காவிட்டமாலும், இந்த உலகத்தைவிட இரண்டு பங்கு பெரிதான கடல்கூடவா நமக்கு இடமளிக்காது? என்ற ஞானம் அவள் உள்ளத்தில் பளிச்சிடுகிறது. ஒரு முறை இந்திரனுடைய அன்புக்குப் பத்திரமான அகல்யா, இப்போது கடலின் அன்புக்கும் பாத்திரமாகி விடுகிறாள்! கதை மிகச் சிறிது; ஆனால், உலகமோ மிகப் பெரிது. அதனால்தான் இந்தப் பரந்த உலகிலே இந்தச் சின்னக் கதை பலருடைய நினைவுப் பொருளாக இன்னமும் காட்சி கொடுத்துக் கொண்டு வருகிறது. நன்றாக நடந்து வந்த ஒருத்தி வழுக்கி விழுந்துவிடுகிறாள். இந்திரன் நல்லவன் அல்லன் என்றாலும், கெட்டிக்காரன். ஊரைச் சுற்றுவதற்கு உதவும் லைசென்ஸ்ாகவும் பர்மிட்டாகவும் தரிசனம் தர அவளது கழுத்தில் தாலியைக் கட்டினான். குறிக்கோளை முடித்துக் கொண்டான். ஆனால் அப்போது தடம் புரண்ட குறிக்கோளுடன் அபலை ஒருத்தி தவிப்பதைப் பற்றி அவனால் கவலைப்பட முடியவில்லை. அவனுக்குத் திருமணம் நடைபெறுகிறது. அவனுடைய அவளுக்காக இரங்குகிறாள் அகல்யா. கனக லிங்கத்தின் உதவி ஒத்தாசைக்கும் சோதனை வந்தவுடன், குறுக்கிட்டு நின்ற பழைய தசரத குமாரன் அவளுக்கு அடைக்கலம் தருவதாகக் கையடித்துச் சொல்லுகிறான். கடைசியில், சமையற்காரன் ஒருவன் பாலையும் பாவையையும் ஒன்றாக்கி உவமை பேசப் போக, அவள் அக்கணமே கைவிடப்பட்டுக் கடலிடைச் சங்கமம் ஆகின்றாள்! இதுதான் கதை! அல்லவா? உங்களை ஒரு கேள்வி கேட்கப் போகிறேன். அகல்யா கனகலிங்கம் ஆகிய இவ்விருவரில், உங்கள் மனத்தை நிறைக்கும் உருவம் யாருடையது? என்ன, யோசிக்கிறீர்களே?