பக்கம்:விந்தன் கட்டுரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுயம்வரத்துக்கு முன்னால் 67 செய்தது இந்த நாடு. அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை வெறும் 'போகப் பொருள்'களாகக் கருதி, அவர்களுடைய பெயர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், ஒளிந்து கொள்ளாமலும் சில ஆண்கள் கவர்ச்சிக்காக, வயிற்றுப் பிழைப்புக்காக எழுதும் கதைகள், அவற்றைக் கூசாமல் வெளியிடும் ஏடுகள் கண்ணராவி, கண்ணராவி! அதைவிடக் கொடுமை அம்மாதிரி கதைகளைத்தான் நீங்கள் விரும்பிப் படிக்கிறீர்கள் என்று அவர்கள் சொல்வது! அந்த ரகத்தில் சேராத இந்த நாவலை அவர்கள் சொல்லும் 'டின் ஏஜர்'ஸாரும் படிக்கலாம், 'டின் ஏஜர்ஸ்' அல்லாதவர்களும் படிக்கலாம். படித்துவிட்டுத் தங்கள் கருத்தை எனக்கு எழுதவும் எழுதலாம். இந்த நூலைத் தொடர்ந்து என்னால் எழுதப்பட்டுள்ள மற்ற நூல்களும் வெளியாவது நண்பர் ராமநாதனின் கையில் மட்டும் இல்லை; அது உங்கள் கையிலும் இருக்கிறது. இப்போதைக்கு 'இது போதும்' என்று நினைக்கிறேன். மற். றவை பின்னர், ‘சுயம்வரம்', 2-10-1973 $ 3, § 3 &