பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

விந்தன் கதைகள்

தாயாரின் கண்களில் நீர் சுரந்தது. "அந்தப் பாழும் பீச்சு எப்படியிருக்கும், என்னமாயிருக்கும் என்றுகூட எனக்குத் தெரியாதேடா, கண்ணு!” என்றாள் அவள்.

மணிக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. "என்ன! உனக்குக் கூடவா தெரியாது!" என்றான்.

தாயார் மெளனம் சாதித்தாள்.

"பொய் சொல்லாதே, அம்மா! நிஜமாச் சொல்லு!” என்றான் மணி.

"நிஜமாத்தான் சொல்றேன்; அது எந்தப் பக்கம் இருக்கும் என்றுகூட இன்று வரை எனக்குத் தெரியாதேடா!"

மணிக்கு அழுகை வந்துவிட்டது. "போ, அம்மா! நீ பொய் சொல்றே!" என்று அவன் உண்மை'யைச் சொல்லி, அழ ஆரம்பித்து விட்டான்.

தாயார் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தாள், அவன் கேட்கவில்லை. அழுதபடியே சிறிது நேரத்திற்கெல்லாம் அயர்ந்து துங்கி விட்டான்.

* * *

அன்றிரவு மாணிக்கம் பிள்ளை சாப்பிட்டானதும் தன்னை 'பீச்'சுக்காவது கூட்டிக் கொண்டு போகும்படி குழந்தை அழுத விஷயத்தை அவரிடம் தெரிவித்தாள் அவருடைய மனைவி.

"எல்லாவிசயமும் தெரிந்த நீயே இப்படிச்சொன்னாநான் என்ன பண்றது? செலவுக்குக் காசு தேடற விசயம் ஒரு பக்கம் இருக்கட்டும்; முதல்லே நேரம் இருக்கா? அதைச் சொல்லு!" என்றார் மாணிக்கம் பிள்ளை.

“எதற்குத்தான் உங்களுக்கு நேரம் இருக்கு?" என்று வெறுப்புடன் சொல்லி விட்டுக் குப்புறப்படுத்துக் கொண்டாள் அவள். ஒரு நீண்ட பெருமூச்சு வரும்வரை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மாணிக்கம் பிள்ளை படுத்துக் கொள்வதற்காகத் திண்ணைக்குச் சென்று விட்டார்.