பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264

விந்தன் கதைகள்

வருகிறார்கள்?" என்று திரும்பிப் பார்த்தேன். யாருமில்லை; படிகள் மரப் படிகளாதலால் நான் ஏறியபோது கேட்ட சத்தம் அது!

எனக்கு முன்னாலேயே அவள் வந்து அங்கே உட்கார்ந்திருந்தாள். நான் சிரித்துக் கொண்டே சென்று அவள் பக்கத்தில் அமர்ந்தேன்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை!" என்று மழுப்பிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்கள் இருவரைத் தவிர அங்கு வேறு யாருமே இல்லை!"

அந்த நிமிஷம் எனக்கு மிகவும் சந்தோஷமாகத்தான் இருந்தது. "இன்றைக்காவது மனம் விட்டுப் பேசலாம்" என்று எண்ணிக் கொண்டேன்.

அடுத்த நிமிஷம் அதற்கும் வந்தது ஆபத்து எங்கிருந்தோபத்துப் பன்னிரண்டு பேர் ஒருவர் பின் ஒருவராக வந்து சேர்ந்தார்கள். வந்தவர்களுக்கு உட்கார இடமா இல்லை? எங்களுக்குச் சற்றுத் தூரத்தில் எவ்வளவோ இடம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் அவர்கள் அனைவரும் எங்களைச் சுற்றியிருந்த இடங்களிலேயே உட்கார்ந்தார்கள்!

எங்களுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டுமென்பதில்தான் இந்த ஜன்மங்களுக்கு எவ்வளவு ஆர்வம்! ஏழேழு ஜன்மத்துக்கும் தொடர்ந்து வரும் என்கிறார்களே, அந்தப் பாவத்தைப் போலல்லவா இவர்கள் எங்கு போனாலும் எங்களை விடாமல் தொடர்ந்து வந்து தொலைக்கிறார்கள்!

எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் அவர்களையெல்லாம் வாயாரத் திட்ட வேண்டும்போல் இருந்தது. ஆனால் அத்தனை பேருக்கும் மத்தியில் அது சாத்தியமா? ஆகேவ, அவரவர்களை மனமாரத் திட்டிக்கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தோம்.

படம் முடிந்ததும் ஒருவரையொருவர் எதிர்பார்க்கவில்லை; 'பதவிசுகள் போல அவரவர்களுடைய வீட்டை நோக்கி நடையைக் கட்டிவிட்டோம்.

* * *