பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

விந்தன் கதைகள்

ரு நாள் “உடனே வரவும்” என்று திரு. சதானந்தத்தின் பிள்ளையிடமிருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது; சென்றேன்.

அங்கே கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. ஏனெனில் சாட்சாத் திரு. சதானந்தமே அங்கே வீற்றிருந்தார் என்னைக் கண்டதும் அவர் சாவதானமாக, “இத்தனை நாளும் வடக்கே யாத்திரை போயிருந்தேன். இன்னும் இரண்டு நாளைக்கெல்லாம் இலங்கை செல்வதென்று தீர்மானித்திருக்கிறேன். அதற்குள் உன்னை ஒருமுறை பார்த்து விட வேண்டுமென்று ஆசை. அதனால் தந்தி கொடுக்கச் சொன்னேன்” என்று தம் நீண்ட தாடியைத் தடவிக் கொடுத்துக் கொண்டே சொன்னார்.

“என்ன! உம்மைச் சூரிய கிரகணத்தன்று கடல் கொண்டு போகவில்லையா?”

“இல்லை; வடநாடு தான் கொண்டு போயிருந்தது!”

“இத்தனை நாளும் அங்கே என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?”

“உனக்குத்தான் தெரியுமே. தமிழ் நாட்டில் என்னுடைய எழுத்துக்கு மதிப்பில்லையென்று. ஆகவே வடநாட்டுக்குச் சென்று ‘வக்ரநாத்ஜி’ என்று பெயரை மாற்றி வைத்துக் கொண்டேன். ஹிந்தியிலே பல நவீனங்களை எழுதித் தள்ளினேன். அவையெல்லாம் இப்பொழுது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுப் பிரமாதமான ஜோடனைகளுடன் வெளி வந்திருப்பதை நீ பார்த்திருக்கலாமே?”

“ஆமாம், ஆமாம், பார்த்தேன். அந்த வக்ரநாத்ஜி நீங்கள் தானா?”

“ஆமாம் தம்பி, ஆமாம்!”

“இது என்ன வேடிக்கை! அப்படியானால் அமரகவி பாரதியார் கூட ஒருவேளை உங்களைப் போல் தான் எங்கேயாவது இன்னும் யாத்திரை செய்து கொண்டிருப்பாரோ?”

“அவர் அப்படிச் செய்திருந்தால் தான் இன்னும் ஜீவிய வந்தராயிருக்கலாமே!” என்றார் அவர்.

அதைக் கேட்ட எனக்கு, “நாமும் கடலில் மூழ்கிவிட்டால் என்ன?” என்று தோன்றிற்று.