பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன் கதைகள்

420

"அப்படின்னா நான் ஊருக்குப் போகலாமுங்களா?"

"பேஷாய்ப் போகலாம்!"

அவ்வளவுதான்; "அதுக்குக் கூட எங்கிட்ட பணம் இல்லீங்களே!" என்று அவன் மறுபடியும் அங்கேயே உட்கார்ந்து அழ ஆரம்பித்து விட்டான். சரளா அவனிடம் பத்து ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு வெளியே வந்தாள்.

"நல்ல வேளை குலோப்ஜானையே கொண்டு வந்து அவனுக்கு கல்யாணம் செய்து வைக்காமல் விட்டாயே, அந்த மட்டும் சந்தோஷம்!" என்றான் முரளி.

அலைந்த அலைச்சல் தீர, ஆளுக்கோர் ஐஸ்கிரீமுக்குப் பதிலாக ஆளுக்கு இரண்டு ஐஸ்கிரீமை அவர்கள் தீர்த்துக் கட்டிக் கொண்டிருந்தபோது, "என்னடா, என்ன கெடைச்சது?" என்றான் அவர்களுக்குச் சற்று தூரத்தில் உட்கார்ந்திருந்த ஒருவன், இன்னொருவனை நோக்கி.

"பத்து ரூபாய் தாண்டா! அதுவும் அவன் கொடுக்கலே, அவனோட ஒரு குட்டி வந்தாபாரு, அவ கொடுத்தா!" என்றான் இவன்.

"போயும் போயும் இன்னிக்குப் பொம்பிளைதானா கெடைச்சா, ஏமாத்த? ஐயோ, பாவம்!" என்றான் அவன்.

சரளா இதைக் கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினாள்? அதே குலோப்ஜான் காதலன்!

அவளை அவன் கண்டதும் தன் சகாவுடன் வெளியே விரைந்தான்.

"போலீஸ், போலீஸ்!" என்று கத்தினாள் சரளா, ஆத்திரத்துடன்.

"ஸ், போலீசை ஏன் அனாவசியமாக கூப்பிடுகிறாய்? அவர்களிடம் நீ இரக்கம் காட்டலாம். உன்னிடம் அவர்கள் இரக்கம் காட்டக் கூடாதா?" என்றான் முரளி.