பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருப்தி

445

"வானத்தில் இருக்கும் நிலவைப் பிடித்து இவளுக்குத் தரவேண்டுமாம்; அப்போதுதான் இவள் சாப்பிடுவாளாம்!"

அவ்வளவுதான்; தலையில் இடி விழுந்தது போல் அதிர்ச்சியுற்ற கவிஞர் நட், குழந்தையைச் 'சட்டென்று' இறக்கிக் கீழே விட்டுவிட்டு அவசர அவசரமாக உள்ள சென்றார். பூர்த்தி பெறாத மனோரதம் போல் பூர்த்தி பெறாமலிருந்த அந்தக் கருத் தோவியத்தை எடுத்துக்கொண்டு வந்து சுக்கு நூறாகக் கிழித்து எறிந்துவிட்டு, "போச்சு, என் முயற்சி அத்தனையும் வீணாய்ப் போச்சு! - என்ன பேராசை இந்தக் குழந்தைகளுக்கு? இவையும் மனிதர்களைப் போலவே கிட்டாத பொருள்களுக்கெல்லாம் கொட்டாவி விடுகின்றனவே? - இனி நோபல் பரிசாவது, எனக்குக் கிடைக்கப் போவதாவது?" என்றார் பெருமூச்சுடன்,

"மனிதக் குழந்தைதானே? பிறக்கும்போதே பேராசையும் சேர்ந்து பிறந்துவிட்டாற் போலிருக்கிறது!" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன் நான்!