பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிஞர் ஒன்பாற் சுவையார்

465

"சரி!" என்று நான் அவரிடம் பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து நீட்டி, "ஸெண்ட்டையும் நீங்களே வாங்கிக்கொண்டு விடுங்கள், உங்களுக்குப் பிடித்த மணத்தில்!" என்றேன்.

"நன்று, நன்று!" என்று கவிஞர் பெருமான் உற்சாகத்துடன் தலையை ஆட்டிவிட்டுச் சென்றார்.

றுநாள் காலை கவிஞரும் நானும் 'சர்வாலங் காரதாரி'களாக வாசலில் நின்றுகொண்டிருந்தோம், வானா மூனாவின் வண்டியை எதிர்நோக்கி-வண்டி வந்தது; சென்றோம்.

'மியூஸிக் ஹால்' என்ற அறிவிப்புப் பலகையுடன் காட்சியளித்த ஓர் ஹாலில் பக்க வாத்தியக்காரர்கள் பலர் பலவிதமான வாத்தியங்களுடன் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் எங்களைக் கொண்டு போய் விட்டார்கள். அங்கே இருந்த வானா மூனா ஆர்மோனியத்தைக் கட்டி அழுது கொண்டிருந்த ஒருவரை ஒன்பாற்சுவையாருக்குச் சுட்டிக் காட்டி, "இவர்தான் மியூஸிக் டைரக்டர்!" என்றார்.

"ஓகோ!" என்றார் கவிஞர்.

அடுத்தாற்போல் ஏதோ எழுதப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டினார்கள். "இதுதான் பாட்டுக்குரிய சம்பவமோ?" என்று அலட்சியத்துன் அதை வாங்கிப் பார்த்தார் கவிஞர்.

ஐயகோ! அதில் பாட்டுக்குரிய சம்பவமா இருந்தது? -இல்லை , பாட்டே இருந்தது - 'என்ன பாட்டு?' என்கிறீர்களா? இதோ:

எடுப்பு
டப்பா, டப்பா, தகர டப்பா!
டப்பா, டப்பா, தகர டப்பா!
தொடுப்பு
பொழுது போன வேளையிலே
கழுதை வாலில் கட்டிவிட்டால்
இழுத்துக்கொண்டு ஓடையிலே
எழும் இன்ப நாதமடா!
(டப்)

வி.க.-30