பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முடிப்பு
டண்டணால், டண்டணால்,
டண்டணால், டண்டணால்!
தானாப் போடும் தாளம், டப்பா!
மானாமதுரை போகும் குப்பா!
(டப்)

'மியூஸிக் டைரக்டர்' இந்தப் பாட்டை ஒரு முறை பாடிக் காட்டியதும் வானா மூனா 'ஓஹோஹோ!' என்று அந்த ஹாலே அதிரும்படிச் சிரித்துவிட்டு, எப்படி, பாட்டு? என்றார் கவிஞர் பெருமானிடம்.

"வழு, ஒரே வழு! என்றார் கவிஞர்.

"எது? பேப்பர் ஒரே வழுவழுப்பா யிருப்பதைச் சொல்கிறீர்களா?"

"இல்லை, பாடலில் பிழை மலிந்து கிடப்பதைச் சொல்கிறேன்!"

"நாசமாய்ப் போச்சு, போ! பின் பாட்டுக்காரன் கூடப் பாடலில் பிழை காண ஆரம்பித்தால் நான் வாழ்ந்த மாதிரிதான்!" என்றார் வானா மூனா எரிச்சலுடன்.

"என்ன சொன்னீர்!" என்று ஆத்திரத்துடன் எழுந்தார் கவிஞர்.

"அவனவன் வேலையை அவனவன் செய்தால் போதும் என்றேன்!"

"எது, எவன் வேலை?"

"பின்னணி பாடுவது உமது வேலை! அதற்குத் தான் உம்மை இங்கே அழைத்திருக்கிறேன்; அதை ஒழுங்காகச் செய்யும்!"

"என்ன! பின்னணிப் பாடகனோ, யாம்?"

அவ்வளவுதான்; மறுபடியும் மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்ட கவிஞர்பிரானை வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்ப்பிப்பதற்குள் என் பாடு 'போதும், போதும்' என்று ஆகிவிட்டது!

ன்னே கொடுமை, என்னே கொடுமை! கம்பனை இனம் கண்டு கொண்ட தமிழ் கூறும் நல்லுலகம், கவிஞர் ஒன்பாற்சுவையாரையும் இனம் கண்டு கொல்லும் நாள்- வழு, வழு!-இனம் கண்டு கொள்ளும் நாள் எந்நாளோ, எந்நாளோ?