478
விந்தன் கதைகள்
"என் அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், தெரியுமா? என் தலை!"
அவன் மீண்டும் சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறாய்?"
"உன் தலையை உனக்கு யாராலும் வாங்கிக் கொடுக்க முடியாது!"
இப்படிச் சொல்லிவிட்டானே பாவி, என்ன செய்வாள் பாவம்! - மீண்டும் ஓடினாள். 'அரைப்படி அரிசி யாராவது முறைக்கடனாகக் கொடுக்க மாட்டார்களா, அன்றைய இரவைக் கழித்துவிட மாட்டோமா?' என்ற கவலையோடு கையில் முறத்துடன் வீடு வீடாக நுழைந்து வந்து கொண்டிருந்த அம்மாவிடம்.
"அம்மா, அம்மா! அப்பா எனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார், அம்மா?"
"அது என்ன வாங்கிக் கொடுத்தாரோ, எனக்குத் தெரியாது!"
உண்மையிலேயே தெரியாதுதானே?- எனவே அவள் நிற்கவில்லை; போய்க்கொண்டே இருந்தாள்.
"சொல்லு, அம்மா?"-அவள் முந்தானையைப் பிடித்து இழுத்தது குழந்தை.
"விளக்கு வைக்கிற நேரமாச்சு! அப்பா பசியோடு வருவார்; விடு சனியனே, விடு!"
"ஊஹும், விடமாட்டேன்; சொன்னால்தான் விடுவேன்!"
"விடப் போகிறாயா, இல்லையா?" - கோபா வேசத்துடன் இரைந்தாள் தாய்.
"போம்மா, சொல்லும்மான்னா!" கொஞ்சலுடன் கெஞ்சியது சேய்.
"சொன்னா கேட்கமாட்டே? போன்னா போ!" என்று குழந்தையைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளி, அதன் முதுகில் 'பளார், பளார்' என்று அறைந்தாள் அவள்.
குச்சு வீட்டுக் குழந்தை ‘கோ' வென்று அழுதது.