பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

484

விந்தன் கதைகள்

முதலாளிக்கு இது எப்படியோ தெரிந்துவிட்டது என்ற செய்தி மறுநாள் காலை அந்தரங்கக் காரியதரிசியின் காதுக்கு எட்டி யிருக்கிறது. அவ்வளவுதான்; ஆபீசுக்குப் போனால் ஆபத்து என்று வீட்டிலிருந்தபடியே தம்முடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டிருக்கிறார்!"

"அப்படியா சங்கதி? -இப்பொழுதுதான் தெரிகிறது, 'கொண்டு வா, நாயை!' என்று அவர் ஏன் வந்ததும் வராததுமாயிருக்கும் போதே அப்படி இரைந்தார் என்று?-சரி; கொண்டு வருகிறேன் ஐயா, அந்த நாயை நானே கொண்டு வருகிறேன்!" என்று நான் நடந்தேன், 'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டபின் உதைக்கு அஞ்சிப் பயனில்லை!' என்று .

"அந்தரங்கக் காரியதரிசியைவிட அல்சேஷியன் நாயே மேல் என்று இப்பொழுதாவது தெரிந்ததே முதலாளிக்கு, அதைச் சொல்லுங்கள்!" என்றான் ஆபீஸ் பையன்.