பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

விந்தன் கதைகள்

"அட பாவமே, உன்னையா நான் அடிச்சுட்டேன்?"

இதைச் சொல்லி வாய்கூட மூடவில்லை; அதற்குள் கண்களிலே நீர்முட்டிக்கொண்டு வந்துவிட்டது அவனுக்கு-அப்படியே இவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அவனும் அழ ஆரம்பித்துவிட்டான்!

நான் அழவில்லை-எனக்குத்தான் தெரியுமே, என் மனத்தை ஏமாற்ற!-'அது அவர்கள் வந்த வழி!' என்று ஒரே போடாகப் போட்டு அதை அடக்கிவிட்டு உள்ளே சென்றேன், அந்த வருடத்துத் தீபாவளியை ஆனந்தமாகக் கொண்டாட!