திருந்திய திருமணம்
525
இவர்கள் இருவருக்குமிடையே சிக்கிக் கொண்ட சிதம்பரம் என்ன செய்வார், பாவம்! ஆசிரியர் அறிவழகனாரை சந்தித்து, "மூட நம்பிக்கையை ஒழிப்பதற்கு முன்னால் முடிமணியை ஒழித்து விட்டீர்களே, அவன் எங்கே போயிருக்கிறான் என்றாவது தெரியுமா?" என்று உசாவினார்.
"அவன் எங்கே போயிருந்தால் என்ன? அறிவில் என்னையும் மிஞ்சி விட்டான் அவன்! அது மட்டுமல்ல; பழைய சடங்குகளையும், பழைய சம்பிரதாயங்களையும் உடைத்தெரிந்ததோடு, புதிய சடங்குகளையும் புதிய சம்பிரதாயங்களையும் கூட உடைத்தெரிந்து விட்டான் அவன்! அதோ பாருங்கள் அவன் எழுப்பியிருக்கும் புதிய கோஷத்தை, புதிய குரலை!" என்று முழங்கிக் கொண்டே எதிர் வீட்டுச் சுவரைச் சுட்டிக் காட்டினார் அவர்.
சிதம்பரம் படித்தார், படித்தார்.
"திருந்திய திருமணம் வீழ்க; திருட்டுத் திருமணம் வாழ்க"
அறிவழகனார் அறையலுற்றார்.
"இதையே 'காதல் வாழ்க' களவழி வாழ்க! என்று 'வள்ளுவன் பாணி'யில் எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும், இல்லையா?”
சிதம்பரம் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார் அறிவழகனார்.
"சிக்கலான கேள்வி; சிந்திக்க வேண்டிய கேள்வி என்றார் சிதம்பரம்.