பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

532

விந்தன் கதைகள்

அவசரம் அவசரமாகக் கையிலிருந்த பீடித்துண்டைக் கீழே போட்டுக்காலால் மிதித்து விட்டு, "என்ன அம்மா, என்ன?" என்றான் அவன் பரபரப்புடன்.

"அங்கே பாருடா, இடியட்" என்றாள் கும் கும், ஆத்திரத்துடன்.

முத்து பார்த்தான்; ஒட்டிய வயிறும் குழி விழுந்த கண்களுமாகக் காட்சியளித்த ஒரு சிறுமி, 'பேபி'க்காக வாங்கி வைத்திருந்த 'பிஸ்கெட்டுகளில் ஒன்றை எடுத்து அவசரம் அவசரமாகத் தின்று கொண்டிருந்தான்!

"ஐயோ, பாவம்!" என்றான் முத்து.

"பாவமாவது? கூப்பிடு, போலீஸை!" என்று இரைந்தாள் கும்கும்.

அதற்குள் அந்த வழியாக வந்த ஒரு போலீஸ்காரர் "திருட்டுச் சிறுக்கி, இங்கேயும் உன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்து விட்டாயா? நட ஸ்டேசனுக்கு" என்று அந்தப் 'பாரத புஷ்பத்தைத் தள்ளிக் கொண்டு போனார்.

முத்துவுக்கு ஒன்றும் புரியவில்லை. "ஏம்மா, காலையிலே அந்தப் பையன் ரொட்டியைத் திருடித் தின்றபோது, ஐயோ பாவம்! என்று நீங்கள் தானே?" என்று கேட்டான், திருதிருவென்று விழித்துக் கொண்டே.

"அது கலை; இது வாழ்க்கையடா, முட்டாள்!" என்றாள்.

அவள். அப்படியானால் அன்பு...

நடிக்கத்தானா?