586
விந்தன் கதைகள்
அதைப் பார்த்துக்கொண்டே வந்த ஆறுமுகத்துக்கு ஒன்றும் புரியவில்லை; விழித்த கண் விழித்தபடி "ஏன் ஸார், நீங்களா திருடுகிறீர்கள்?" என்றான் வியப்புடன்.
"வேறு வழியில்லை, அப்பனே! உனக்கும் எனக்கும் போர்வை வேண்டும் என்றால் திருடுவதைத் தவிர வேறு வழியே இல்லை!" என்று அவனையும் தன்னுடைய கட்சியில் சேர்த்துக் கொண்டு கையை விரித்தான் கணபதி!
"நிஜமாகவா?"
"சந்தேகமில்லாமல்!"
"அப்படியானால் நம்முடைய கடைக்கு எதிர்த்தாற் போல் இருக்கிறாரே அந்தக் கிழவர், அவருக்குக் கூடத் திருடினால் தான் போர்வை கிடைக்குமா?"
"ஆமாம் அப்பனே, ஆமாம்!"
"அப்படியானால் அவர் ஏன் திருடவில்லை?"
"திருட முடியவில்லை; அதனால் திருடவில்லை!"
"ஐயோ, பாவம்! திருட முடிந்தவர்கள் அவருக்கும் ஒரு போர்வை திருடிக் கொடுத்தால்?"
"கொடுக்கலாம், நீ ஒத்துழைத்தால்!"
"எப்படி?"
"சொல்கிறேன் - ராத்திரி நான் கடையை மூடும் போது நீ நம் கடைக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலுக்கு அருகே வந்து நில்; நான் ஒரு போர்வையை எடுத்துக் கொடுக்கிறேன் - வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துவிடு!"
"இவ்வளவுதானே, அவசியம் வந்து நிற்கிறேன்!" என்றான் ஆறுமுகம்.
"அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டான் கணபதி - இனி அவனுக்கு இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அந்த ஒரு ரூபாய் கூடக் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நிம்மதியில்!
சொன்னது சொன்னபடி அன்றிரவு கணபதி கடையை மூடும் போது, கடைக்குப் பின்னாலிருக்கும் ஜன்னலருகே வந்து நின்றான்; ஆறுமுகம் அவனிடம் ஒரு போர்வையை எடுத்துக் கொடுத்தான் கணபதி.
"இன்னும் ஒன்று!" என்றான் ஆறுமுகம்.
"எதற்கு? ஒன்று கொடுத்தால் போதும்; போ போ" என்றான் கணபதி.
"அவருக்கு இல்லை ஸார், எனக்கு!"
"ஓ, உனக்கா இந்தா!" என்று அவன் இன்னொரு போர்வையை எடுப்பதற்காகத் திரும்பியபோது, 'லொக்கு லொக்கு' என்ற இருமல்