மிஸ் நளாயினி-1950
371
ராஜகோபாலனுக்கும், செளபாக்கியவதி ராதைக்கும்’ என்ற வரியைப் படித்ததும் அவள் நிலை குலைந்தாள்.
"என்ன, அம்மா! ஏன் அப்படி நிற்கிறாய்? என்றார் அவளுடைய தந்தை.
அவள் பதில் சொல்லவில்லை; கல்யாணப் பத்திரிகையை அவரிடம் கொடுத்துவிட்டு நின்றது நின்றபடி நின்றாள்.
அதைப்படித்ததும், "அவன் கிடக்கிறான்!" என்றார் அவர் அலட்சியமாக.
அதேமாதிரி அவளால் சொல்ல முடியவில்லை; விம்மினாள். அதற்குள் கல்யாணப் பத்திரிகையுடன் வந்திருந்த கடிதம் ஒன்று அவருடைய கண்ணில் பட்டது. அதையும் எடுத்துப் பிரித்துப் படித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எல்லோரும் வந்துவிட வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.
"ஆமாம், இவன் கல்யாணத்திற்கு ஒருவாரம், என்ன? ஒரு மாதத்திற்கு முன்னாலேயே போயிருக்க வேண்டியது தான்" என்றார் அவர் வெறுப்புடன்.
அவர் எதிர்பார்த்தபடி, உஷா அந்தக் கல்யாணத்தை வெறுக்கவில்லை. "அதனாலென்ன அப்பா, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி நாம் அனைவரும் அந்தக் கல்யாணத்திற்கு போகத்தான் வேண்டும்!" என்றாள் அவள் கண்களை துடைத்து விட்டுக் கொண்டே.
"இதென்ன, அம்மா உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"
"எனக்கு ஏன்பைத்தியம் பிடிக்கவேண்டும்? அவருக்குப்பிடித்த பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொள்கிறார்; அவ்வளவுதானே விஷயம்!"
"நம்பிக்கை துரோகம் செய்த அந்த நயவஞ்சகனுக்கா இப்படிப் பரிந்து பேசுகிறாய்?-உங்களுடைய இஷ்டம் அதுவானால் அதை நான் ஆக்ஷேபிக்கவில்லை!" என்றார் அவர்.
அவ்வளவுதான்: ஒருவாரத்துக்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே எல்லோரும் கோடைக்கானலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
"நீங்கள் எங்கே வராமல் இருந்துவிடப் போகிறீர்களோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை வந்துவிட்டீர்கள்!" என்று கூறி, அவர்களை வரவேற்று உபசரித்தார் ரங்கநாதம்.