பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

விந்தன் கதைகள்

கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன. ராஜகோபாலன் 'ராஜா' மாதிரியே இருந்தான். அங்குமிங்குமாக அவன் நடமாடுவதைப் பார்க்கும் போதெல்லாம் உஷாவை ஏதோ ஒன்று என்னவோ செய்வது போல் இருந்தது!

மறுநாள் காலை கல்யாணம். அதற்கு முதல் நாள் மாலை உஷாவிடம் வந்து, "நளாயினியின் புனர்ஜன்மம் நீதான்!” என்றான் ராஜகோபாலன்.

அவள் பதில் சொல்லவில்லை.

"வேறொரு பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ என்னுடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறாயே, அதுவே போதும், உன்னை நான்கல்யாணம் செய்து கொள்ள" என்றான் அவன்.

அவள் தலை கவிழ்ந்தது; அதைத் தொடர்ந்து ஒரு சொட்டுக் கண்ணிர் கீழே விழுந்து தெறித்தது.

"அழாதே, அசடே! நாளைக்கு நான் மாலையிடப் போகும் மாதரசி நீதான்" என்றான் அவன்.

அவ்வளவுதான்; அவள் எழுந்து அவசர அவசரமாகக் கண்களை துடைத்துவிட்டுக் கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தாள். அப்போது படபடவென்று அடித்துக் கொண்ட அவளது இமைகள் "இது நிஜந்தானா, இது நிஜந்தானா? என்று கணத்துக்கு கணம் அவனைக் கேட்பது போல் இருந்தது!

"ஆமாம், உஷா, அவ்வளவும் சோதனை ராதை கல்யாணப் பத்திரிகையோடு சரி, நீதான் இத்தனை நாளும் நான் தேடிக் கொண்டு இருந்த மிஸ் நளாயினி 1950!" என்றான் அவன்.

அவள் முகம் மலர்ந்தது!