386
விந்தன் கதைகள்
"தம்பி நீ நிரபராதி; உனக்கு விடுதலை!" என்றார் நீதிபதி.
"விடுதலை; திருடனுக்கு விடுதலை!" என்று வியப்பின் மிகுதியால் கன்னையா கத்தினான்.
அவன் மனைவி அவனைத் தட்டி எழுப்பி "என்ன விஷயம்?" என்று விசாரித்தாள்.
கன்னையா திடுக்கிட்டு எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். கரிய உருவம் ஒன்று சுவர் ஏறிக் குதித்து வெளியே செல்வதுபோல் இருந்தது.
"யார் அது?" என்று அதட்டினான் அவன்.
பதில் இல்லை. அதற்குள் அந்த உருவம் அவன் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது!
"எல்லாம் வெறும் பிரமை!" என்று சொல்லிக் கொண்டே அவன் படுத்தான்; அவன் மனைவியும் அந்த நேரத்தில் அவனை மேலும் தொந்தரவு செய்ய விரும்பாமல் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் பொழுது விடிந்ததும் போலீஸார் வந்து அவன் வீட்டுத் கதவை தட்டினார்கள்!
கன்னையா அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்து போய்க் கதவைத் திறந்தான்: போலீஸார் உள்ளே நுழைந்தனர்.
வீடு சோதனை யிடப்பட்டது. அன்றைக்கு முதல் நாள் இரவு அவன் கொடிமேல் அலுப்புடன் சுழற்றி எறிந்த சட்டைப்பை யிலிருந்து எஜமான் வீட்டில் காணாமற் போன வைரம் கண்டெடுக்கப் பட்டது.
அப்புறம் கேட்க வேண்டுமா? கட்டிய மனைவியும், பெற்று வளர்த்த பிள்ளையும் கதறக் கதறக் கன்னையா கைது செய்யப்பட்டான்.
பாவம் தங்கள் கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகச் சுஜாதாவின் யோசனையின் பேரில் அவளுடைய 'ப்ரெண்ட்' செய்த வேலை இதெல்லாம் என்று அவனுக்கு எப்படித் தெரியும்?போலீஸாருக்கே தெரியாதே!