பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நேற்று வந்தவள்

339

சேர்ந்து வந்தாள். வந்த லலிதா சும்மா வரவில்லை; முன்னால் நிராகரித்துவிட்டு சென்ற புதுப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்தாள்.

எனக்கு அப்போதுதான் தெரிந்தது-சரசு தன் பிறந்த வீட்டுக்குப் போகவில்லை. லலிதாவின் வீட்டுக்குத்தான் போயிருந்தாள் என்று.

"வாருங்கள்; உட்காருங்கள்!"என்று நான் மைத்துனரை வரவேற்றேன். எங்கள் இருவரையும் நோக்கி, "உங்களுக்கு நாங்கள் 'நேற்று வந்தவர்களா'னால் எங்களுக்கு நீங்கள்'நேற்றுவந்தவர்கள்'தானே?"என்றாள், சரசு சிரித்துக்கொண்டே.

"ம், சொல்லுங்கள்!" என்றாள் லலிதாவும், அவளுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டே.

எங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வாயடைத்துப் போனோம்.