பக்கம்:விந்தன் கதைகள் 2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அன்பும் அருளும்

403

"அபாயம் நீங்கியது!"

அடுத்தாற்போல் எனக்கு எதிரே போட்டிருந்த மேஜையின் மேல் அவள் வானரம் போல் தாவி உட்கார்ந்தாள்.

அவ்வளவுதான்; கடைக்குள் அடைந்து கிடந்தவர்களெல்லாம் அவளை ஏதோ ஓர் அதிசயப் பிராணியைப் பார்ப்பது போல் பார்க்கத் தொடங்கினார்கள்-அவளும் அவ்வாறு பார்க்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்; பார்த்துச் சிரிக்க வேண்டியவளாய்த்தான் இருந்தாள்!

அவர்களுடைய சிரிப்புக்கிடையே என்னை நோக்கி, "என்ன உங்கள் உடம்புக்கு?"என்று கேட்டாள் அவள்.

"ஒன்றுமில்லை" என்றேன்.

"பின் ஏன் ஒரு மாதிரியாயிருக்கிறீர்கள்?"

"சும்மாத்தான்!”

"பொய்! உங்களுக்குத் தலையைக் கிலையை வலிக்கிறதா, என்ன?”

"ஆமாம்; கொஞ்ச நேரமாகத் தலையை வலிக்கத்தான் செய்கிறது!"

"அதாவது, நான் வந்ததிலிருந்து என்று சொல்லுங்கள்!"

"சே, சே! அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கே இப்படி.....?"

"சரிதான்; என்னை இங்கிருந்து சீக்கிரமாக வெளியேற்றச் சதியோ?"

"சரியாய்ப் போச்சு; வந்தவர்களை 'ஏன், என்ன?’ என்று விசாரிக்க வேண்டாமா?"

"ஆமாம், ஆமாம்-அது கிடக்கட்டும், எனக்குக் கொஞ்சம் மல் வேண்டியிருக்கிறது-நானும் 'க்யூ' வரிசையில்தான் நிற்க வேண்டுமா?"

"காலையில் வந்திருந்தால் நின்றிருக்கலாம்; இப்போது தான் கூட்டமில்லையே!-சரி, எத்தனை கெஜம் வேண்டும்?"

"கெஜமாவது! நாலு பீஸ் வேண்டும் ஸார், நாலு பீஸ்!"

"ஹா!"