105
பழக் கடைக்காரன் வந்தான்; சிறிய பழங்க ளெல்லாம் வெளியே வந்துவிட்டதற்குக் காரணம் என்ன வென்று கவனித்தான், கூடைக்கு அடியில் ஒரு பொத்தல் இருப்பது அவன் கண்ணில் பட்டது. உடனே அதை அடைத்து அவன் சிறிய பழங்களை எடுத்து மீண்டும் கூடைக்கு அடியில் போட்டான்; பெரிய பழங்களை எடுத்து அவற்றுக்கு மேலே அடுக்கினான்.
அவன் அடுக்கி முடித்ததும் சிறிய பழங்களில் ஒன்று பெருமூச்சு விட்டுக்கொண்டே சொல்லிற்று:
"குறுக்கு வழியில் நாம் முன்னேற முயன்றது பலிக்க வில்லை; பெரிய பழங்களைப்போல முன்னேற வேண்டுமானால், நாமும் அவற்றைப் போல் பருத்தால் தான் முடியும் போலிருக்கிறது!”
號。浙。浙
66. நிதர்சனம்
எதையும் நம்பாதவனைப் பார்த்து, "குயில் கூவும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் ஒரு பெரியவர்.
"மாட்டேன்; கூவுவதைக் கேட்டால்தான் நம்புவேன்" என்றான் அவன்.
குயில் கூவிற்று; அவன் நம்பினான்.
"மயில் ஆடும் என்பதையாவது நம்புகிறாயா நீ?" என்றார் பெரியவர்.
"மாட்டேன்; ஆடினால்தான் நம்புவேன்' என்றான் அவன்.