இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இது ரசிகர்களின் நிலை; கதாசிரியர்களின் நிலையோ? - நாவல் எழுதுவதைவிட, சிறுகதை எழுதுவதைவிட, குட்டிக் கதை எழுதுவது கடினம். ஆனால், பத்திரிகைக்காரர்கள் அதற்கு அளிக்கும் சன்மானமோ மிகவும் குறைவு!
எனினும், காலத்தால் சாகாத இந்தக் கதைகளுடன் இவற்றை எழுதும் கதாசிரியனும் காலத்தால் சாவதில்லை என்பது மட்டும் உண்மை.
அந்தப் பெருமை அடியேனுக்கும் ஒருவேளை கிட்டலாம். எப்போது? செத்த பின்!
அதுவரை......
உயிரோடு செத்துக்கொண்டிருக்கும் விந்தைதான் என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்குக் கை வந்த விந்தையாயிற்றே!
சென்னை | வணக்கம்,
விந்தன். | ||||
14-3-67 |