110
இதைக் கேட்டதும் காதலி தன்னை மறந்து சிரித்தாள்; காதலனும் சிரித்தான். அவர்கள் இருவரும் சிரித்ததைப் பார்த்துக் காதலியின் அப்பாவும் சிரித்து விட்டார்!
பலன்? - கலியாணத்தில்தான் முடிந்தது என்றாலும் அவர்கள் மட்டும் என்னை நினைக்கவா செய்கிறார்கள்? ஊஹும்!
6
என்னை வைத்து மேலே வந்த ஒருவனைப் பார்த்து, “நீங்கள் எப்படி மேலே வந்தீர்கள்”? என்று ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்.
“உழைப்பு, உழைப்பு, கடும் உழைப்பு!” என்று அளந்தான் அவன்.
நான் சிரித்தேன்; “ஏன் சிரிக்கிறாய்?” என்று கேட்டது என்னைத் தாங்கி நின்ற சுவர்.
'“நாம் இருவரும் இங்கே இருப்பது மேலே போனவனுக்குத்தான் தெரியவில்லையென்றால் அந்தப் பத்திரிகை நிருபருக்கும் தெரியவில்லையே, அதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்!” என்றேன் நான்.
7
இரவு நேரம்; என்னைத் தூக்கிக்கொண்டு ஒருவன் முன்னால் செல்ல, இன்னொருவன் தலையில் நூற்றுக்கணக்கான வண்ணப் போஸ்டர்களுடனும், ஒரு வாளி கூழுடனும் அவனுக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தான். இருவரும் போஸ்டர் ஒட்டுவதற்