95
"மூடு வாயை எதைச் செய்தாலும் நான் தெய்வத்தின் பேரால் செய்கிறேன்; நீதியின் பேரால் செய்கிறேன்" என்று அடித்துச் சொல்லிற்று பேனா.
"தெய்வம்!- அப்படி ஒன்று இருப்பதாக நம்பிக்கை இருக்கிறதா, உனக்கு?" என்று இடித்துக் கேட்டது கத்தி.
"இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது!" என்றது அது.
"சரி, அவரவர்கள் செய்யும் பாவ-புண்ணியத்துக்குத் தக்கபடி அவர் தண்டிக்கிறார் என்பதில் நம்பிக்கை இருக்கிறதா, உனக்கு?" என்றது இது.
"இருக்கிறது; நிச்சயமாக இருக்கிறது!’ என்றது அது மீண்டும்.
"அப்படியானால் கொலைகாரனைத் தண்டிக்கும் போது உனக்கு ஏன் தெய்வத்தின் மேல் நம்பிக்கை யில்லாமல் போய்விடுகிறது?" என்று கேட்டது இது.
"அதுதான் நீதி!' என்றது பேனா.
"நீதி!-குற்றமுள்ள நீ, குற்றமற்ற கடவுள் படைத்த உயிரைக் கொல்வதா, நீதி" என்று கத்தி கேட்டது
அதற்குமேல் பேனா பேசவில்லை-காரணம், கத்தியின் மேல் வீசுவது போலிருந்த ரத்த வாடை தன் மேலும் வீசுவது போலிருந்ததை அது அப்போது உணர்ந்ததுதான்!
浙。浙。浙